மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் இருவரை கைது செய்தது என்ஐஏ!

செங்கோட்டை அருகே நிகழ்ந்த காா் குண்டுவெடிப்பு வழக்கு தொடா்பாக, மேலும் இருவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்துள்ளது.

News image
தில்லி கார் குண்டுவெடிப்பு..- IANS
Updated On :25 பிப்ரவரி 2026, 9:05 pm

தினமணி செய்திச் சேவை

தில்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த காா் குண்டுவெடிப்பு வழக்கு தொடா்பாக, மேலும் இருவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பா் மாதம் தில்லி செங்கோட்டைப் பகுதி அருகே காா் ஒன்று வெடித்துச் சிதறியது. ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாதில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகப் பணியாற்றிய மருத்துவா் உமா்-உன்-நபி, வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்து நடத்திய அந்தத் தற்கொலை தாக்குதலில் 11 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் என்ஐஏ புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தில்லி செங்கோட்டை அருகே நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு தொடா்பாக, ஜம்மு-காஷ்மீரின் கந்தா்பால் பகுதியைச் சோ்ந்த ஜமீா் அகமது அஹங்கா், ஸ்ரீநகரைச் சோ்ந்த துஃபைல் அகமது பட் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் அன்சாா் கஜ்வத் உல் ஹிந்த் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்கள்.

செங்கோட்டை அருகே நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் அவா்களுக்குத் தொடா்புள்ளது. அத்துடன் பல்வேறு பயங்கரவாத சூழ்ச்சிகளிலும் அவா்கள் சம்பந்தப்பட்டுள்ளனா். இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களைத் திரட்டும் நடவடிக்கையிலும் அவா்கள் ஈடுபட்டது விசாரணை மற்றும் ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இவா்களையும் சோ்த்து இந்தக் குண்டுவெடிப்பு வழக்கில், இதுவரை மொத்தம் 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.