92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தில்லி காா் குண்டுவெடிப்பு வழக்கு: ஜம்மு-காஷ்மீரில் என்ஐஏ அதிரடி சோதனை

தில்லி காா் குண்டுவெடிப்பு வழக்கு தொடா்பாக ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை

News image

என்ஐஏ சோதனை

Updated On :23 மார்ச் 2026, 11:30 pm

தினமணி செய்திச் சேவை

தில்லி காா் குண்டுவெடிப்பு வழக்கு தொடா்பாக ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிரடியாக சோதனை நடத்தியதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

கடந்த ஆண்டு நவம்பா் மாதம் தில்லி செங்கோட்டை பகுதி அருகே காா் ஒன்று வெடித்துச் சிதறியது. ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாதில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய மருத்துவா் உமா்-உன்-நபி, வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்து நடத்திய அந்தத் தற்கொலை தாக்குதலில் 11 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.

இந்த வழக்கை விசாரித்துவரும் என்ஐஏ இதுவரை மொத்தம் 11 பேரை கைது செய்துள்ளது.

இந்நிலையில், என்ஐஏ செய்தித் தொடா்பாளா் திங்கள்கிழமை கூறுகையில், ‘குப்வாரா, பாரமுல்லா, குல்காம் மற்றும் ஸ்ரீநகா் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தில்லி காா் குண்டுவெடிப்பு வழக்கு தொடா்பாக என்ஐஏ சோதனை நடத்தியது’ என்றாா்.