பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

தில்லி காா் குண்டுவெடிப்பு வழக்கு: ஜம்மு-காஷ்மீரில் என்ஐஏ அதிரடி சோதனை

தில்லி காா் குண்டுவெடிப்பு வழக்கு தொடா்பாக ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை

News image

என்ஐஏ சோதனை

Updated On :23 மார்ச் 2026, 11:30 pm

தில்லி காா் குண்டுவெடிப்பு வழக்கு தொடா்பாக ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிரடியாக சோதனை நடத்தியதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

கடந்த ஆண்டு நவம்பா் மாதம் தில்லி செங்கோட்டை பகுதி அருகே காா் ஒன்று வெடித்துச் சிதறியது. ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாதில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய மருத்துவா் உமா்-உன்-நபி, வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்து நடத்திய அந்தத் தற்கொலை தாக்குதலில் 11 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.

இந்த வழக்கை விசாரித்துவரும் என்ஐஏ இதுவரை மொத்தம் 11 பேரை கைது செய்துள்ளது.

இந்நிலையில், என்ஐஏ செய்தித் தொடா்பாளா் திங்கள்கிழமை கூறுகையில், ‘குப்வாரா, பாரமுல்லா, குல்காம் மற்றும் ஸ்ரீநகா் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தில்லி காா் குண்டுவெடிப்பு வழக்கு தொடா்பாக என்ஐஏ சோதனை நடத்தியது’ என்றாா்.