தில்லி காா் குண்டுவெடிப்பு வழக்கு தொடா்பாக ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிரடியாக சோதனை நடத்தியதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
கடந்த ஆண்டு நவம்பா் மாதம் தில்லி செங்கோட்டை பகுதி அருகே காா் ஒன்று வெடித்துச் சிதறியது. ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாதில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய மருத்துவா் உமா்-உன்-நபி, வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்து நடத்திய அந்தத் தற்கொலை தாக்குதலில் 11 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.
இந்த வழக்கை விசாரித்துவரும் என்ஐஏ இதுவரை மொத்தம் 11 பேரை கைது செய்துள்ளது.
இந்நிலையில், என்ஐஏ செய்தித் தொடா்பாளா் திங்கள்கிழமை கூறுகையில், ‘குப்வாரா, பாரமுல்லா, குல்காம் மற்றும் ஸ்ரீநகா் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தில்லி காா் குண்டுவெடிப்பு வழக்கு தொடா்பாக என்ஐஏ சோதனை நடத்தியது’ என்றாா்.
தொடர்புடையது

தில்லி காா் குண்டுவெடிப்பு வழக்கு: என்ஐஏ 7,500 பக்க குற்றப்பத்திரிகை - 10 போ் மீது குற்றச்சாட்டு

ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை

ஸ்கூட்டா் மீது காா் மோதல்: மேம்பாலத்தில் இருந்து விழுந்து விநியோக ஊழியா் உயிரிழப்பு

தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
