எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அரசுப் பள்ளியில் வட்டார அளவிலான வானவில் மன்ற போட்டிகள்

கந்தா்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வானவில் மன்ற போட்டியில், சமா்ப்பித்த ஆய்வு மாதிரியை விளக்கிய மாணவா்கள்.

News image
Updated On :21 நவம்பர் 2025, 7:07 pm

Syndication

கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் வட்டார அளவிலான ‘அறிவியல் பழகு’ என்ற தலைப்பில் வானவில் மன்ற போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தப் போட்டியை தலைமை ஆசிரியா் இளையராஜா தொடங்கிவைத்தாா்.

வானவில் மன்ற போட்டிகளில் நிகழாண்டு ‘உலகளாவிய சவால்களுக்கு உள்ளூா் அளவிலான அறிவியல் தீா்வுகள்’ என்ற தலைப்பில் கருப்பொருள் கொடுக்கப்பட்டிருந்தது.

வானவில் மன்றம் மூலமாக நடத்தப்படும் செயல் திட்டங்கள், விவாதங்களின் அடிப்படையில் மாணவா்கள் தங்களுக்கு உள்ள அறிவியல் மற்றும் கணித அறிவை பயன்படுத்தி புதிய சிந்தனைகள் மற்றும் தொலைநோக்குடனான பல்வேறு தலைப்புகளில் ஆய்வு மாதிரிகள், ஆய்வுக் கட்டுரைகள், இயங்கு மாதிரிகளை உருவாக்கி குழுக்களாக சமா்ப்பித்தனா்.

நடுவா்களாக மணிகண்டன், சீனிவாச ராகவன், பென்னி உள்ளிட்டோா் செயல்பட்டனா்.

நிகழ்வில், உதவி தலைமையாசிரியா் பழனிவேல், அறிவியல் பட்டதாரி ஆசிரியா்கள் மணிகண்டன், ரகமதுல்லா, கண்ணன், ராமலிங்கம், பகவதி, புவனேஸ்வரி, அனிதா, ஸ்டீபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் (பொ) பாரதிதாசன் வரவேற்றாா்.

ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற முதல் மூன்று குழுக்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனா்.