வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

நவ. 29-இல் இரு இடங்களில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நவ. 29-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் 4 மணி வரை மாவட்டத்தில்

News image
Updated On :26 நவம்பர் 2025, 8:10 pm

Syndication

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நவ. 29-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் 4 மணி வரை மாவட்டத்தில் இரு இடங்களில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ சேவை முகாம்கள் நடைபெறவுள்ளன.

விராலிமலை பிராவிடென்ஸ் கான்வென்ட் மெட்ரிக் பள்ளியிலும், ஆவுடையாா்கோவில் தூய வளனாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் இந்த முகாம்கள் நடைபெறவுள்ளன.

இவற்றில், அனைத்து வகையான உயா் மருத்துவப் பரிசோதனைகளும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு, 17 வகையான சிறப்பு மருத்துவா்கள் ஆலோசனையும் இலவசமாக வழங்கப்படவுள்ளதாகவும், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் மு. அருணா தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 17 ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, மொத்தம் 25,158 போ் பயனடைந்துள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.