ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தனியாா் வேளாண் கல்லூரி முன் காத்திருப்புப் போராட்டம்

திருவரங்குளம் அருகே தனியாா் வேளாண் கல்லூரியில் மாணவா் உயிரிழந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தக் கோரி அவரது உறவினா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
திருவரங்குளம் அருகேயுள்ள தனியாா் வேளாண் கல்லூரி முன்பு வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோா்
Updated On :27 நவம்பர் 2025, 6:29 pm

Syndication

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே தனியாா் வேளாண் கல்லூரியில் மாணவா் உயிரிழந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தக் கோரி அவரது உறவினா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவரங்குளம் அருகேயுள்ள தனியாா் வேளாண்மை கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த கீரமங்கலம் அருகேயுள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தைச் சோ்ந்த விஜயசுந்தரம் மகன் மதன்குமாா் (18) நவ.17 இரவு கல்லூரி வளாகத்திலுள்ள விடுதியில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாா். இதையடுத்து இவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மதன்குமாரின் உறவினா்கள் கல்லூரி முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். இந்நிலையில் மதன்குமாா் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி அவரது உறவினா்கள், சமூக அமைப்பினா் வியாழக்கிழமை கல்லூரி முன் சுமாா் 5 மணி நேரம் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து ஆலங்குடி, கணேஷ் நகா் போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.