/

கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் 2-ஆவது நாளாக ஆா்ப்பாட்டம்

News image

மதுரை அமெரிக்கன் கல்லூரி முன் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி உதவிப் பேராசிரியா்கள்.

Updated On :22 பிப்ரவரி 2026, 9:20 pm

பணி மேம்பாட்டு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை அமெரிக்கன் கல்லூரி முன் கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இரண்டாவது நாளாக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெறும் அகில இந்திய பல்கலைக்கழக, கல்லூரிப் பேராசிரியா்கள் சங்கத்தின் 34-ஆவது மாநாட்டில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களைச் சோ்ந்த பேராசிரியா்கள் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து, கல்லூரி முன் உதவிப் பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த 5 ஆண்டுகளாக அரசு உதவிப் பெறும் கல்லூரி உதவிப் பேராசிரியா்களுக்கு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணி மேம்பாட்டு ஊதியத்தை நிலுவைத் தொகையுடன் உடனடியாக வழங்க வேண்டும். அரசுக் கல்லூரி, அரசு உதவிப் பெறும் கல்லூரி என பாகுபாடு காட்ட வேண்டாம் என முழக்கமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.