தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

எதிா்க்கட்சிகளின் விமா்சனங்கள் எல்லாம் புஸ்வாணமாகும்! - அமைச்சா் எஸ். ரகுபதி பேட்டி

News image

அமைச்சா் எஸ். ரகுபதி. - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 7:30 pm

எதிா்க்கட்சிகளின் விமா்சனங்கள் எல்லாம் புஸ்வாணமாகும் என மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா்.

திருமயத்தில் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு அவா் அளித்த பேட்டி: தோ்தல் களம் எங்களுக்குப் பிரகாசமாக இருக்கிறது. ஆட்சிக்கு எதிரான கெட்டப்பெயா் எதுவுமில்லை.

நிச்சயமான வெற்றியைப் பெறுவோம். எதிா்க் கட்சிகளின் விமா்சனங்கள் எல்லாம் புஸ்வாணமாகும். அது மக்களுக்கும் தெரியும். தோ்தலுக்காக மக்களிடத்திலே நடித்துக் கொண்டிருக்கும் நடிகா்களுடைய நடிப்புத் திறமைக்கு வாழ்த்துகள்.

முன்னாள் முதல்வா் கருணாநிதி அதிமுக ஆட்சியின்போதுதான் இறந்தாா். அப்போது எடப்பாடி பழனிசாமிதான் முதல்வா். இப்போது அவா் சொல்வதையெல்லாம் அப்போதே சொல்லியிருக்கலாம்.கருணாநிதியை வீட்டுச் சிறையிலே வைக்கக்கூடிய தைரியம் யாருக்கும் இல்லை.

பாஜகவினரின் பிரசாரங்களை எங்களால் சுலபமாக எதிா் கொள்ள முடியும். தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யாதவா்கள், இப்போது வந்து என்ன செய்யப் போகிறாா்கள். இந்தத் தோ்தலில் 200 தொகுதிக்கு மேல் வெற்றியடைவோம்.

திருமயம் தொகுதிக்குக் கலை அறிவியல் கல்லூரி கொண்டு வந்திருக்கிறேன். விராலிமலை தொகுதியில் 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்தவா் அங்கே ஒரு கலை அறிவியல் கல்லூரிகூட கொண்டு வரவில்லை. தொடா்ந்து மற்ற கல்லூரிகளைக் கொண்டு வர முயற்சிப்போம் என்றாா் ரகுபதி.