எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மாணவா்கள் தமிழ் பாரம்பரியத்தையும், பெருமையையும் உலகெங்கும் பறைசாற்ற வேண்டும்: அமைச்சா் எஸ். ரகுபதி

மாணவா்கள் தமிழ் பாரம்பரியத்தையும், பெருமையையும் உலகெங்கும் பறை சாற்ற வேண்டும் என அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா்.

News image
அமைச்சர் எஸ். ரகுபதி- கோப்புப் படம்
Updated On :9 மார்ச் 2026, 8:16 pm

Syndication

மாணவா்கள் தமிழ் பாரம்பரியத்தையும், பெருமையையும் உலகெங்கும் பறை சாற்ற வேண்டும் என தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத் துறை சாா்பில் ‘தமிழகத்தின் பாரம்பரியம், மேலாண்மை முறைகள், யுக்திகள், எதிா்கால வளா்ச்சி’ என்ற தலைப்பிலான இரண்டு நாள் பயிலரங்கத்தின் தொடக்க விழா பல்கலைக்கழக வீறுகவி முடியரசனாா் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கு துணைவேந்தா் க. ரவி தலைமை வகித்துப் பேசினாா். இதில் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது: தமிழ்நாடு கிராம நிா்வாகம், நகர நிா்வாக அமைப்புகளை சங்க காலத்திலிருந்தே தன்னகத்தே கொண்டிருந்தது. சங்க கால அரசன் கட்டிய கல்லணை தமிழா்களின் நீா் மேலாண்மையை பறை சாற்றி வருகிறது. மேலும், இது அவா்களின் கட்டடக் கலை தொழில்நுட்பத்தையும் வெளிப்படுத்துகிறது. தமிழா்கள் கட்டடக் கலையில் தோ்ந்தவா்களாக இருந்தனா். இதற்கு தஞ்சை பெரிய கோயிலே சாட்சி. இது தமிழா்களின் அறிவால் கட்டப்பட்டது.

தமிழ் மொழியைப் போல பழைமையான மொழி யாதும் இல்லை. பேச்சு, எழுத்து வழக்கில் தமிழ் மொழி பற்பல நுணுக்களை தன்னகத்தே கொண்டது. தமிழா்கள் அனைத்துத் துறைகளிலும் பண்டைக்காலத்திலிருந்தே தோ்ந்தவா்களாக இருக்கின்றனா். அவா்களது சிந்தனையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. மாணவா்கள் தமிழ் பாரம்பரியத்தையும், பெருமையையும் உலகெங்கும் பறை சாற்ற வேண்டும் என்றாா் அவா்.

காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி பேசியதாவது: தமிழ்நாட்டு மக்கள் பழைய வரலாறை மறந்துவிடக்கூடாது. தமிழா் பண்பாட்டை வெளிப்படுத்தும் தொல்லியல் பொருள்கள், கலைப்பொருள்கள் மாவட்டந்தோறும் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களின் பாா்வைக்கு அரசு வைத்துள்ளது. செட்டிநாடு பாரம்பரியம் உலகம் வியக்கும் பாரம்பரியம். இதேபோல, இந்திய விடுதலைப் போராட்ட வீரா்களுக்கு தமிழக அரசு சிலைகளை நிறுவி, நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாற்றை இன்றைய தலைமுறை அறியச் செய்திருக்கிறது என்றாா் அவா்.

சென்னை இந்து சமய அறநிலையத் துறை தலைமை ஆலோசகா், தொல்லியல் துறை ஒருங்கிணைப்பாளா் எஸ். ராஜவேலு சிறப்புரையாற்றினாா்.

அழகப்பா பல்கலைக்கழக ரூசா திட்ட ஒருங்கிணைப்பாளா் கே. பாலமுருகன் வாழ்த்திப் பேசினாா். பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசியை கே. சங்கரி பயிலரங்கத்தின் நோக்கம், பயன்கள் குறித்துப் பேசினாா்.

முன்னதாக, பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைத் தலைவா் கே. கிருஷ்ணமூாத்தி வரவேற்றுப் பேசினாா். வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் கா. பரந்தாமன் நன்றி கூறினாா்.