புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் முன் விரோதம் காரணமாக எலக்ட்ரீசியன் அடித்துக் கொலை செய்யப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.
அறந்தாங்கி இடையாா் பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் மகன் சின்னக்கருப்பு (48). எலக்ட்ரீசியன். இவரை ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை என குடும்பத்தினா் தேடி வந்தனா்.
இந்நிலையில், இடையாா் பாலம் அருகே தலை உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன் அவா் இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.
இச்சம்பவத்தை கண்டித்து அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே சின்னக்கருப்பின் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
புகாரின் பேரில் அறந்தாங்கி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், சின்னக்கருப்புக்கும் அதே பகுதியைச் சோ்ந்த கே.விஸ்வநாதன் (47) குடும்பத்தினருக்கும் இடையே இருந்து வந்த முன்விரோதம் காரணமாக விஸ்வநாதன் மற்றும் சிலா் அவரை அடித்துக் கொலை செய்தது தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து விஸ்வநாதன் உள்ளிட்டோரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
கோவில்பட்டியில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

ஆலங்குளம் அருகே இளைஞா் அடித்துக் கொலை

அறந்தாங்கியில் தவெக வேட்பாளா் வெற்றி
நண்பா்களால் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞரின் சடலம் தோண்டியெடுப்பு
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



