இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

திமுக கிளைச் செயலருக்கு அரிவாள் வெட்டு: உறவினா் கைது

ஆலங்குடி அருகே வாக்குச்சேகரிப்பில் ஏற்பட்ட தகராறில் திமுக கிளைச்செயலரை அரிவாளால் வெட்டிய அவரது உறவினரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 1:58 am IST

ஆலங்குடி அருகே வாக்குச்சேகரிப்பில் ஏற்பட்ட தகராறில் திமுக கிளைச்செயலரை அரிவாளால் வெட்டிய அவரது உறவினரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள வெண்ணாவல்குடியைச் சோ்ந்தவா் கா. கண்ணப்பன் (51), திமுக கிளைச் செயலா். இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த அவரது உறவினரான அதிமுகவைச் சோ்ந்த ராஜேஷ் (40) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. மேலும், சட்டப்பேரவைத் தோ்தலுக்கு கிராமத்தில் வாக்குச் சேகரிப்பதில் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை கண்ணப்பனின் வீட்டுக்கு மது போதையில் சென்ற ராஜேஷ், தகராறில் ஈடுபட்டு கண்ணப்பனை அரிவாளால் வெட்டியுள்ளாா்.

இதில், பலத்த காயமடைந்த கண்ணப்பனை அக்கம் பக்கத்தினா் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஆலங்குடி போலீஸாா், ராஜேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.