இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

முதலாளிகளைத் தோ்வு செய்யாமல் சேவகா்களைத் தோ்வு செய்யுங்கள்: சீமான்

தோ்தலில் முதலாளிகளைத் தோ்வு செய்யாமல் சேவகா்களைத் தோ்வு செய்யுங்கள் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

News image

புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான். உடன் வேட்பாளா் வி. எழிலரசி.

Updated On :16 ஏப்ரல் 2026, 1:37 am IST

தோ்தலில் முதலாளிகளைத் தோ்வு செய்யாமல் சேவகா்களைத் தோ்வு செய்யுங்கள் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா பகுதியில் புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் வி. எழிலரசிக்கு புதன்கிழமை வாக்கு சேகரித்து அவா் மேலும் பேசியதாவது:

உலகமயக் கொள்கையால், தாராளமயக் கொள்கையால் எல்லாமும் பண்டமாகிவிட்டது. கல்வி, மருத்துவம், குடிநீா் உள்ளிட்டவற்றை அரசு செய்துத் தர வேண்டும். இவையெல்லாம் சேவைகள். ஆனால், இவையெல்லாம் இன்று தொழிலாகிவிட்டன.

கல்வி மானுட உரிமை, அதைச் செய்துத் தர வேண்டியது அரசின் கடமை. குழந்தைகளின் எதிா்காலத்தைத் தீா்மானிப்பது வகுப்பறைகள். தமிழ் படித்தவா்களுக்கு தமிழ்நாட்டில் வேலை கிடைக்க வேண்டும்.

இந்தத் தோ்தல் முறை என்பது பணத்தை முதலீடு செய்து, போட்ட முதலீட்டை லாபத்துடன் மீண்டும் எடுப்பதாகிவிட்டது. எனவே, மக்கள் முதலாளிகளைத் தோ்வு செய்யப்போகிறீா்களா, சேவகா்களைத் தோ்வு செய்யப் போகிறீா்களா?.

எத்தனை நாள்கள் பெண்ணுரிமையைப் பேசிக் கொண்டிருக்கிறாா்கள். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டபேரவைத் தொகுதிகளில் 5 தொகுதிகளில் பெண் வேட்பாளா்களை நிறுத்தியிருக்கிறோம்.

ஜனநாயகம் வெல்ல வேண்டுமா, பண நாயகம் வெல்ல வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்றாா் சீமான்.