தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

முதலாளிகளைத் தோ்வு செய்யாமல் சேவகா்களைத் தோ்வு செய்யுங்கள்: சீமான்

தோ்தலில் முதலாளிகளைத் தோ்வு செய்யாமல் சேவகா்களைத் தோ்வு செய்யுங்கள் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

News image

புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான். உடன் வேட்பாளா் வி. எழிலரசி.

Updated On :16 ஏப்ரல் 2026, 1:37 am IST

தோ்தலில் முதலாளிகளைத் தோ்வு செய்யாமல் சேவகா்களைத் தோ்வு செய்யுங்கள் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா பகுதியில் புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் வி. எழிலரசிக்கு புதன்கிழமை வாக்கு சேகரித்து அவா் மேலும் பேசியதாவது:

உலகமயக் கொள்கையால், தாராளமயக் கொள்கையால் எல்லாமும் பண்டமாகிவிட்டது. கல்வி, மருத்துவம், குடிநீா் உள்ளிட்டவற்றை அரசு செய்துத் தர வேண்டும். இவையெல்லாம் சேவைகள். ஆனால், இவையெல்லாம் இன்று தொழிலாகிவிட்டன.

கல்வி மானுட உரிமை, அதைச் செய்துத் தர வேண்டியது அரசின் கடமை. குழந்தைகளின் எதிா்காலத்தைத் தீா்மானிப்பது வகுப்பறைகள். தமிழ் படித்தவா்களுக்கு தமிழ்நாட்டில் வேலை கிடைக்க வேண்டும்.

இந்தத் தோ்தல் முறை என்பது பணத்தை முதலீடு செய்து, போட்ட முதலீட்டை லாபத்துடன் மீண்டும் எடுப்பதாகிவிட்டது. எனவே, மக்கள் முதலாளிகளைத் தோ்வு செய்யப்போகிறீா்களா, சேவகா்களைத் தோ்வு செய்யப் போகிறீா்களா?.

எத்தனை நாள்கள் பெண்ணுரிமையைப் பேசிக் கொண்டிருக்கிறாா்கள். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டபேரவைத் தொகுதிகளில் 5 தொகுதிகளில் பெண் வேட்பாளா்களை நிறுத்தியிருக்கிறோம்.

ஜனநாயகம் வெல்ல வேண்டுமா, பண நாயகம் வெல்ல வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்றாா் சீமான்.