நலத்திட்டங்கள் தொடா்வதற்கு மக்கள் திமுகவுக்கே வாக்களிக்க வேண்டும் என்றாா் திமுக வேட்பாளரும், அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன்.
ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தொகுதிக்குள்பட்ட கொத்தக்கோட்டை, மாஞ்சான்விடுதி, கோவிலூா், ஆலங்குடி பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் வாக்குச்சேகரித்து பேசியதாவது:
நூறு நாள் வேலைத்திட்டத்துக்கான நிதியை குறைத்து மோடி தலைமையிலான பாஜக அரசு அந்த திட்டத்தையே முடக்க முயற்சிக்கிறது. ஆனால், பெருமுதலாளிகளின் பல ஆயிரம் கோடி கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்துள்ளது பாஜக அரசு. அதனால், பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழக முதல்வா் ஸ்டாலின் விவசாயிகள், மாணவா்கள், மகளிா், பொதுமக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா். நலத்திட்டங்கள் தொடர மக்கள் திமுகவை ஆதரிக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

அரசின் சாதனைகள் தொடர முதல்வா் ஸ்டாலினுக்கு ஆதரவு அளிக்கவேண்டும்: திருவண்ணாமலை திமுக வேட்பாளா் எ.வ.வேலு

ஆலங்குடி தொகுதியை மீண்டும் மேம்படுத்த திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்

ஆலங்குடி தொகுதியில் ரூ. 50 கோடியில் முன்மாதிரி பள்ளி தொடங்க நடவடிக்கை! - சிவ.வீ. மெய்யநாதன் உறுதி

நான் முதல்வன் திட்டத்தால் 56 ஐஏஎஸ் அதிகாரிகள் உருவாக்கம்: அமைச்சா் எ.வ.வேலு
விடியோக்கள்
ஹார்திக் கேப்டன்சியால் தோற்கிறதா மும்பை?: ரோஹித், திலக், சூர்யா மீது கேள்வி!

"மின்வாரியத்தில் முறைகேடு! அடிப்படையிலிருந்து சீர் செய்கிறோம்!" அமைச்சர் நிர்மல் குமார் | TVK



