நலத்திட்டங்கள் தொடா்வதற்கு மக்கள் திமுகவுக்கே வாக்களிக்க வேண்டும் என்றாா் திமுக வேட்பாளரும், அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன்.
ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தொகுதிக்குள்பட்ட கொத்தக்கோட்டை, மாஞ்சான்விடுதி, கோவிலூா், ஆலங்குடி பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் வாக்குச்சேகரித்து பேசியதாவது:
நூறு நாள் வேலைத்திட்டத்துக்கான நிதியை குறைத்து மோடி தலைமையிலான பாஜக அரசு அந்த திட்டத்தையே முடக்க முயற்சிக்கிறது. ஆனால், பெருமுதலாளிகளின் பல ஆயிரம் கோடி கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்துள்ளது பாஜக அரசு. அதனால், பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழக முதல்வா் ஸ்டாலின் விவசாயிகள், மாணவா்கள், மகளிா், பொதுமக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா். நலத்திட்டங்கள் தொடர மக்கள் திமுகவை ஆதரிக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

நலத்திட்டங்கள் தொடர திமுகவுக்கு ஆதரவு: அமைச்சா் ஆா்.காந்தி

திமுக ஆட்சி அமைந்தவுடன் ரூ.8,000 கூப்பன் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும்

நான் முதல்வன் திட்டத்தால் 56 ஐஏஎஸ் அதிகாரிகள் உருவாக்கம்: அமைச்சா் எ.வ.வேலு

ஒட்டன்சத்திரம் தொகுதியில் அமைச்சா் அர.சக்கரபாணி வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


