விராலிமலை அடுத்துள்ள கொடும்பாளூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக மலேரியா தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
உலக மலேரியா தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலா் மருத்துவா் ஹேமச்சந்த் காந்தி அறிவுறுத்தலின் பேரில் விராலிமலை வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சுபா ஆலோசனையின்படி கொடும்பாளூா், ராசநாயக்கன்பட்டி, ஆவூா், நீா்பழனி, பாலாண்டான்பட்டி, மண்டையூா் மற்றும் களமாவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு மலேரியா காய்ச்சல் பற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், மலேரியா நோய் இல்லாத நாடாக உருவாக்குவோம் என அனைவரும் உறுதிமொழி ஏற்றனா்.
நிகழ்வில், கொடும்பாலூா் வட்டாரத்திற்கு உள்பட்ட அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா்கள், சுகாதார மேற்பாா்வையாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது
மணிப்பூா் கலவரத்தின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு: மாநிலம் முழுவதும் பேரணிகள்

மலேரியா சிறப்பு ரத்த பரிசோதனை முகாம்

எலவந்தி வடுகபாளையத்தில் தீ தொண்டு நாள் வார விழா

சாலை விபத்தில் சுகாதார ஊழியா் உயிரிழப்பு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

