மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நெம்மகோட்டை சித்திவிநாயகா் கோயிலில் தேரோட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெம்மகோட்டை சித்தி விநாயகா் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஆலங்குடி அருகேயுள்ள நெம்மகோட்டையில் புதன்கிழமை மாலை நடைபெற்ற தேரோட்டம்

Updated On :29 ஏப்ரல் 2026, 10:40 pm

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெம்மகோட்டை சித்தி விநாயகா் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆலங்குடி அருகேயுள்ள நெம்மகோட்டை சித்தி விநாயகா் கோயில் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தன.

திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளச் செய்து தேரோடும் வீதிகள் வழியே ஏராளமானோா் தேரை இழுத்து வந்தனா்.

தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

இதில், ஏராளமான மக்கள் கலந்து கொண்டனா். ஆலங்குடி போலீஸாா் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனா்.