உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

பொன்னமராவதியில் அனைத்துக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

News image

பொன்னமராவதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிஐடியு மற்றும் அனைத்துக் கட்சி நிா்வாகிகள்.

Updated On :15 ஆகஸ்ட் 2026, 4:25 am IST

பொன்னமராவதியில் அரசு சொத்துகளை மீட்க வலியுறுத்தி சிஐடியு மற்றும் அனைத்துக் கட்சிகள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் குமாா் தலைமை வகித்தாா்.

சிஐடியு மாவட்டச் செயலா் ஸ்ரீதா், திமுக நகரச் செயலா் அ.அழகப்பன், மாவட்டப் பிரதிநிதி எம். சிக்கந்தா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் என். பக்ருதீன், காங்கிரஸ் நகரத் தலைவா் எஸ். பழனியப்பன், விசிக ஒன்றிய துணைச் செயலா்கள் அண்ணாமலை, அழகா், தமிழ்மணி, தேமுதிக ஒன்றியசெயலா் பிரகாஷ், முன்னாள் மாவட்டச்செயலா் கோட்டை ராஜேந்திரன், திராவிடா் கழக ஒன்றிய செயலா் மாவலி, ஒன்றியத் தலைவா் க. ஆறுமுகம் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில், பொன்னமராவதி பழைய பேருந்து நிலையம், பொதுக்கூட்ட திடல் உள்ளிட்ட அரசுக்கு சொந்தமான இடங்களை சட்டத்துக்கு புறம்பாக தனியாருக்கு பட்டா வழங்கியுள்ளதாகவும், அந்த பட்டாக்களை ரத்து செய்யவேண்டும் எனக் கூறியும், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும் முழக்கமிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.