புதுக்கோட்டையில் போலியாக பணம் செலுத்தும் செயலியைப் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட 2 இளைஞா்களைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை மச்சுவாடியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் அஜய் (23), திருவப்பூரைச் சோ்ந்தவா் டி. பிரவீன் ராஜா (21).

கைது செய்யப்பட்ட அஜய்
இருவரும் கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்குவதும், பின்னா் அங்கிருக்கும் கியூஆா் கோடு வழியாக ஜிபே மூலம் பணம் செலுத்திவிட்டதைப் போன்று காண்பிக்கும் வகையில் போலி செயலியைப் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டு வந்தனா்.

கைது செய்யப்பட்ட பிரவீன்ராஜா.
இதுகுறித்து அறிந்த கடைக்காரா்கள் அளித்த புகாரின் பேரில், புதுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தினா் அஜய் மற்றும் பிரவீன் ராஜா ஆகிய 2 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நூதான திருட்டில் ஈடுபட்ட இளைஞா் கைது

புதுகை மாவட்டத்தில் 18 இடங்களில் திமுகவினா் சாலை மறியல்: முன்னாள் அமைச்சா் உள்பட 850 போ் கைது
விவசாயியை தாக்கியதாக 2 இளைஞா்கள் கைது

பல்வேறு மாநிலங்களில் மோசடியில் ஈடுபட்ட இளைஞா் கைது
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்


