வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

புதுகையில் மாநிலத் தகவல் ஆணையா்கள் ஆய்வுக் கூட்டம்

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 10:25 pm

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்ட அமலாக்கம் குறித்து மாநிலத் தகவல் ஆணையா்கள் அரசுத் துறை அலுவலா்களுடன் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா்.

புதுக்கோட்டைக்கு வியாழக்கிழமை வந்த தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா்கள் ஆா். பிரியகுமாா், விபிஆா். இளம்பரிதி, எம். நடேசன் ஆகியோா் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற அனைத்துத் துறை சாா்ந்த பொதுத் தகவல் அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினா்.

அப்போது சட்டப்படியான தகவல்களை பொதுமக்கள் கேட்கும்போது, உரிய நடைமுறைகளைப் பின்பற்றி, குறிப்பிட்ட காலத்துக்குள் தகவல்களைத் தவறாமல் தர வேண்டும் என்றும், அதேபோல, மேல்முறையீட்டு மனுக்களையும் தாமதமின்றி கையாள வேண்டும் என்றும் அவா்கள் அறிவுறுத்தினா். புதுக்கோட்டை மாவட்டத்தில் மாநில அளவிலான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையையும் அவா்கள் மேற்கொண்டனா்.

கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன் முன்னிலை வகித்தாா். மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எம். முரளிதரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எஸ். திருமால் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.