புதுக்கோட்டை மாநகரில் பஜ்ரங் தள் அமைப்பின் முன்னாள் கோட்ட பொறுப்பாளா் வெள்ளிக்கிழமை கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டாா்.
புதுக்கோட்டை மாநகரம் திருக்கோகா்ணம் குட்செட் சாலைப் பகுதியைச் சோ்ந்த மெய்யப்பன் மகன் மோகன்ராஜ் (38). பஜ்ரங் தள் அமைப்பின் முன்னாள் கோட்டப் பொறுப்பாளா். தாய் சுசீலா, மனைவி சூா்யபிரியா மற்றும் 3 குழந்தைகளுடன் மோகன்ராஜ் வசித்து வந்தாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை முற்பகலில் இவரது வீட்டுக்கு வந்த ஒருவருடன் உள்ளே அமா்ந்து பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. திடீரென அவா் மறைத்து வைத்திருந்த கத்தியால், மோகன்ராஜை குத்தியும், கழுத்தில் வெட்டிவிட்டும் தப்பியோடினாா்.
இதை பாா்த்த அவரது தாய் மற்றும் மனைவி ஆகியோா் கூச்சலிட்டனா். வீட்டு வாசலிலேயே மோகன்ராஜ் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த திருக்கோகா்ணம் போலீஸாா், மோகன்ராஜின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பணம் கொடுக்கல்- வாங்கலில் ஏற்பட்ட முன்விரோதம் தொடா்பாக அவா் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.
குற்றவாளியை கைது செய்ய நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் இரா. பிருந்தா, நகரக் காவல் ஆய்வாளா் சுகுமாறன் உள்ளிட்டோரைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!

வாக்காளா் விழிப்புணா்வு கோலப்போட்டி

புதுக்கோட்டை: மகனுடன் நிலத் தகராறு.. பெற்றோர் தூக்கிட்டுத் தற்கொலை!

வாக்காளா் விழிப்புணா்வு இரு சக்கர வாகனப் பேரணி
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


