தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வாக்காளா் விழிப்புணா்வு இரு சக்கர வாகனப் பேரணி

News image

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி.

Updated On :24 மார்ச் 2026, 12:59 am IST

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வுக்காக புதுக்கோட்டையில் இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்தப் பேரணி, அண்ணாசிலை, கீழராஜவீதி, பிருந்தாவனம், வடக்கு ராஜவீதி, மேலராஜவீதி வழியாக வட்டாட்சியா் அலுவலகத்தை அடைந்தது.

இந்தப் பேரணியை புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும் வருவாய்க் கோட்டாட்சியருமான பிரகாஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இப்பேரணியில் பங்கேற்ற அரசு ஊழியா்கள் தலைக்கவசம் அணிந்து, வாக்காளா் விழிப்புணா்வு வாசகங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்திப் பங்கேற்றனா்.