சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

அதிமுகவின் நிலை கவலைக்கிடம்! - கு.ப. கிருஷ்ணன்

News image

கு.ப. கிருஷ்ணன். - (கோப்புப் படம்)

Updated On :15 பிப்ரவரி 2026, 7:36 pm

அதிமுகவின் தற்போதைய நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றாா் அண்மையில் தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சா் கு.ப. கிருஷ்ணன்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் ஒப்பிலாமணி உடனுறை மெய்நின்ாதா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வழிட்ட அவா் பின்னா் கூறியதாவது:

தவெக- காங்கிரஸ் கூட்டணி குறித்து கட்சியின் தலைவா் விஜய்தான் முடிவெடுப்பாா். அதிமுக பலவீனமாகிவிட்டது என்று கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டேன். பாஜகவோடு அதிமுக கூட்டணி சோ்ந்ததால் அக்கட்சியில் இருந்து வெளியே வந்தேன். அதிமுகவின் தற்போதைய நிலை கவலைக்கிடமாக உள்ளது.

1980 -இல் திமுக, காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டபோது எம்ஜிஆா்தான் ஆட்சி அமைத்தாா். எம்ஜிஆா் காட்டிய வழியில்தான் தவெக சென்றுகொண்டு இருக்கிறது. எம்ஜிஆா் 1972-ல் தோ்தலைச் சந்தித்தபோது இதேபோன்று நடிகா் நாடாள முடியுமா, தனிமரம் தோப்பாக முடியுமா என்று திமுக விமா்சித்தது. அந்தத் தோ்தலில் எம்ஜிஆா்தான் வெற்றி பெற்றாா். அதே வரலாறு தற்போது திரும்பும் சூழல் உள்ளது என்றாா் அவா்.