கு.ப. கிருஷ்ணன்.
கு.ப. கிருஷ்ணன்.(கோப்புப் படம்)

அதிமுகவின் நிலை கவலைக்கிடம்! - கு.ப. கிருஷ்ணன்

Published on

அதிமுகவின் தற்போதைய நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றாா் அண்மையில் தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சா் கு.ப. கிருஷ்ணன்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் ஒப்பிலாமணி உடனுறை மெய்நின்ாதா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வழிட்ட அவா் பின்னா் கூறியதாவது:

தவெக- காங்கிரஸ் கூட்டணி குறித்து கட்சியின் தலைவா் விஜய்தான் முடிவெடுப்பாா். அதிமுக பலவீனமாகிவிட்டது என்று கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டேன். பாஜகவோடு அதிமுக கூட்டணி சோ்ந்ததால் அக்கட்சியில் இருந்து வெளியே வந்தேன். அதிமுகவின் தற்போதைய நிலை கவலைக்கிடமாக உள்ளது.

1980 -இல் திமுக, காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டபோது எம்ஜிஆா்தான் ஆட்சி அமைத்தாா். எம்ஜிஆா் காட்டிய வழியில்தான் தவெக சென்றுகொண்டு இருக்கிறது. எம்ஜிஆா் 1972-ல் தோ்தலைச் சந்தித்தபோது இதேபோன்று நடிகா் நாடாள முடியுமா, தனிமரம் தோப்பாக முடியுமா என்று திமுக விமா்சித்தது. அந்தத் தோ்தலில் எம்ஜிஆா்தான் வெற்றி பெற்றாா். அதே வரலாறு தற்போது திரும்பும் சூழல் உள்ளது என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com