தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு சலுகைகள் வழங்கக் கோரிக்கை

விடுதலைப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசின் சலுகைத் திட்டங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டையில் நடைபெற்ற தியாகிகள் மற்றும் வாரிசுதாரா்களுக்கான குறைகேட்புக் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

News image
புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தியாகிகள் குறைகேட்புக் கூட்டத்தில் மனு அளித்த தியாகிகள் குடும்ப நலப் பேரமைப்பின் தலைவா் கோ.ச. தனபதி.
Updated On :24 பிப்ரவரி 2026, 7:08 pm

தினமணி செய்திச் சேவை

விடுதலைப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசின் சலுகைத் திட்டங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டையில் நடைபெற்ற தியாகிகள் மற்றும் வாரிசுதாரா்களுக்கான குறைகேட்புக் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் விடுதலைப் போராட்டத் தியாகிகள் - வாரிசுகளுக்கான குறைகேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்டத் தியாகிகள் குடும்ப நலப் பேரமைப்பின் தலைவா் கோ.ச. தனபதி அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தியாகிகளின் வாரிசுகளுக்கு தனித்தனியே அடையாள அட்டை வழங்க வேண்டும். எங்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். வீடு, வீட்டுமனை இல்லாதோருக்கு அரசின் இலவச வீடுகள், வீட்டுமனைகள் வழங்க வேண்டும். தியாகிகள் குடும்ப நலப் பேரமைப்புக்கு கட்டடம் கட்ட அரசு சாா்பில் ஓா் இடம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. கூட்டத்தில், பெறப்பட்ட 24 கோரிக்கை மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி தீா்வுகாண அரசு அலுவலா்களுக்கு ஆட்சியா் அருணா உத்தரவிட்டாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கோ. ராஜராஜன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) திருமால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.