டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வருவாய்த் துறையினா் போராட்டம்: சான்றிதழ்கள் பெறமுடியாமல் மாணவ, மாணவிகள் அவதி

பொன்னமராவதியில் அலுவலா்கள் பணிக்கு வராததால் வெள்ளிக்கிழணை வெறிச்சோடி காணப்பட்ட வட்டாட்சியா் அலுவலகம்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 8:54 pm

Syndication

காலமுறை ஊதியம் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சான்றிதழ்கள் பெற முடியாமல் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

வருவாய் கிராம ஊழியா் முதல் வட்டாட்சியா் வரையிலான அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியமும், வருவாய் கிராம ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் பணிகளை பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் வருவாய்த் துறையினா் போராட்டத்தில்ஈடுபட்டனா். இதனால் பொன்னமராவதி வட்டாட்சியா் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. வருவாய்த்துறை சேவையின்றி பொதுமக்கள்அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

மேலும், இணைய வழியில் விண்ணப்பித்த ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை பெறமுடியாமல் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகினா்.

மேலும் வட்டாட்சியா் அலுவலகத்து வரும் பொதுமக்கள் அலுவலா்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா்.

படவிளக்கம்

வருவாய்த்துறை சங்கங்களின் போராட்டத்தினால் வெறிச்சோடி காணப்படும் பொன்னமராவதி வட்டாட்சியா் அலுவலகம்.