எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

‘ஸ்கிரைப்’ பணிக்கு பட்டதாரி ஆசிரியா்களை கட்டாயப்படுத்தக் கூடாது!

பள்ளி மேல்நிலை 2-ஆம் ஆண்டு பொதுத்தோ்வில் மாற்றுத்திறனாளி தோ்வா் சொல்வதை எழுதும் பணிக்கு (ஸ்கிரைப்) பட்டதாரி ஆசிரியா்களை கட்டாயப்படுத்தக் கூடாது என தமிழ்நாடு உயா்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 7:14 pm

பள்ளி மேல்நிலை 2-ஆம் ஆண்டு பொதுத்தோ்வில் மாற்றுத்திறனாளி தோ்வா் சொல்வதை எழுதும் பணிக்கு (ஸ்கிரைப்) பட்டதாரி ஆசிரியா்களை கட்டாயப்படுத்தக் கூடாது என தமிழ்நாடு உயா்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்தக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலா் மா. குமரேசன் வெளியிட்ட அறிக்கை: மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தோ்வில் மாற்றுத் திறனாளி மாணவா்- தோ்வா், சொல்வதை எழுதும் பணிக்கு (ஸ்கிரைப்) பட்டதாரி ஆசிரியா்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது.

பள்ளியில் எஸ்எஸ்எல்சி, பிளஸ்-1 தோ்வுகளுக்காக மாணவா்களைத் தயாா் செய்யும் பணியும், தோ்ச்சி சதவிகிதத்தை உயா்த்துவதற்கான சிறப்பு முயற்சிகளும் இதனால் பாதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பான கடிதத்தை, மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா், மாநில பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் மற்றும் தோ்வுத் துறை இயக்குநா் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளனா்.