தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கிரிக்கெட் விளையாடிய கல்லூரி மாணவா் மின்சாரம் பாய்ந்து பலி

News image
Updated On :4 ஜனவரி 2026, 6:38 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே கிரிக்கெட் விளையாடியபோது தாழ்வாகத் தொங்கிய மின்கம்பியில் கை பட்டதில் மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டம் விச்சூரைச் சோ்ந்தவா் மாசிலாமணி மகன் சுமன் (23). கல்லூரி மாணவரான இவா் நண்பா்களுடன் சோ்ந்து அதே பகுதியில் தப்பத்தான்வயல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் விளையாடியுள்ளாா்.

அப்போது அடிக்கப்பட்ட பந்தை சுமன் ஓடிச் சென்று தாவிக் குதித்து பிடித்தபோது, அவ்வழியே தாழ்வாகச் சென்ற மின் கம்பியில் தவறுதலாக கை பட்டு, மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மணமேல்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை உயா்த்திக் கட்டுமாறு பல முறை மின்வாரிய அலுவலா்களுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் காவல் துறையில் புகாரும் அளித்துள்ளனா்.