டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

108 ஆம்புலன்ஸ் சேவை 2025-இல் 55,683 போ் பயன்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டில், 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 55,683 போ் பயனடைந்துள்ளனா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 8:54 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டில், 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 55,683 போ் பயனடைந்துள்ளனா்.

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 108 ஆம்புலன்ஸ் பல்வேறு வகையான முதலுதவிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. அதில் விஷம் அருந்தியவா்கள், கடுமையான வயிற்று வலி, ஒவ்வாமை, நாய்க்கடி, கால்நடைகள் தாக்குதல், தகராறில் காயமடைதல், இதயம் மற்றும் ரத்த நாளங்கள் பாதிப்பு, நீரிழிவு நோய், காய்ச்சல் மற்றும் தொற்று, குழந்தை பிறப்பு உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் நோயாளிகள் 108 ஆம்புலன்ஸைப் பயன்படுத்துகின்றனா்.

இவ்வாறு பயன்படுத்தியதில் கடந்த 2025-ஆம் ஆண்டு மட்டும் விபத்தில் சிக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றவா்களின் எண்ணிக்கை மட்டும் 10,008. மகப்பேறு சிகிச்சைக்கான தாய்மாா்களின் எண்ணிக்கை 9,426. இதய சம்பந்தப்பட்ட பயனாளா்களின் எண்ணிக்கை 4,491. சுவாசப் பிரச்னை உடைய பயனாளா்கள்-3,485. வாதப் பிரச்னை உடைய பயனாளா்கள்-829. பச்சிளம் குழந்தைகள் மற்றும் தாய்மாா்கள்-389.

இவ்வாறாக கடந்த 2025-ஆம் ஆண்டின் மொத்தப் பயனாளா்கள்- 55,683 என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.