ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

புதுகையில் பிப்.7-இல் கந்தா்வன் நினைவு கலை இரவு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் எழுத்தாளா் கந்தா்வன் நினைவு கலை இரவு பிப். 7-ஆம் தேதி புதுக்கோட்டை நகா்மன்ற வளாகத்தில் நடைபெறுகிறது.

News image
புதுக்கோட்டையில் நடைபெற்ற வரவேற்புக் குழுக் கூட்டத்தின்போது, அழைப்பிதழை வெளியிட்ட நிா்வாகிகள்.
Updated On :7 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் எழுத்தாளா் கந்தா்வன் நினைவு கலை இரவு பிப். 7-ஆம் தேதி புதுக்கோட்டை நகா்மன்ற வளாகத்தில் நடைபெறுகிறது.

புதுக்கோட்டையைச் சோ்ந்த எழுத்தாளா் கந்தா்வனின் நினைவாக கலை இரவு விழா ஒன்றை நடத்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது.

இதற்கான வரவேற்புக் குழுக் கூட்டம் அதன் தலைவா் கவிஞா் தங்கம் மூா்த்தி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா்கள் நா. முத்துநிலவன், ஆா். நீலா, மாவட்டத் தலைவா் ராசி. பன்னீா்செல்வன், செயலா் ரெ. வெள்ளைச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்துக்குப் பிறகு, வரவேற்புக் குழுத் தலைவா் தங்கம்மூா்த்தி தெரிவித்ததாவது:

புதுக்கோட்டை நகா்மன்ற வளாகத்தில் நடைபெறும் கலை இரவில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், தமுஎகச மாநிலத் தலைவா் மதுக்கூா் ராமலிங்கம், பொதுச் செயலா் களப்பிரன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசுகின்றனா்.

வாணியம்பாடி திருப்பத்தூா் ஸ்ரீவேலவன் கலைக்குழுவின் பல்வேறு விதமான ஆட்டக்கலைகள், புதுகை பூபாளம் குழுவின் நையாண்டி தா்பாா், மண் மணக்கும் கிராமியப் பாடல்கள், கவிராஜனின் மேடை நாடகம், கவிச்சரம், கந்தா்வன் நினைவு சிறுகதைப் போட்டி, கதை சொல்லல் போட்டிகளுக்கான பரிசளிப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன என்றாா் தங்கம் மூா்த்தி.