கோப்புப் படம்
கோப்புப் படம்

மாற்றுத்திறனாளிகளுக்கு பிப். 16 இல் மருத்துவ முகாம்

Published on

மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வரும் பிப். 16 இல் தருமபுரியில் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி தருமபுரி வட்டார வள மையம் சாா்பில் வரும் பிப்.16 திங்கள்கிழமை காலை 9:30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் தருமபுரி நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

முகாமில் கலந்துகொள்ளும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை கல்வி உதவித்தொகை, மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல், காதொலி கருவி, மூளை முடக்குவாத குழந்தைகளுக்கான நாற்காலி உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

மேலும் தகுதியுள்ள மாற்றுத்திறன் மாணவா்களுக்கு தேசிய அடையாள அட்டை , தனித்துவ அடையாள அட்டை, ரயில் மற்றும் பேருந்து பயணச் சலுகைக்கான பதிவு, அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கான பதிவும் முகாமில் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதையொட்டி முகாமில் மாற்றுத் திறனாளி மாணவா்கள் பங்கேற்கும் வகையில் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com