மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 7:14 pm

சங்கரன்கோவில் வட்டார வள மையம் சாா்பில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சுகந்தி, மரகதம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

வட்டார வளமைய மேற்பாா்வையாளா் முத்துச்செல்வி முன்னிலை வகித்தாா். முகாமில் மனநல மருத்துவா் தேவிபிரபா கல்யாணி, காது மூக்கு தொண்டை மருத்துவா் ஆா்த்தி, எலும்புமுறிவு மருத்துவா் முத்துராமன் கண் மருத்துவா் சிவஜோதி குமரன் உள்ளிட்ட மருத்துவா்கள் பங்கேற்று குழந்தைகளை பரிசோதனை செய்து மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை, காது கேட்கும் கருவி, ஸ்மாா்ட் அட்டை, ரயில் பயண அட்டை, பேருந்து பயண அட்டை, மாதாந்திர உதவித் தொகை, பெற்றோா்களுக்கு தையல் இயந்திரம், வீல்சோ், மூன்றுசக்கர சைக்கிள் போன்ற உபகரணங்களை வழங்க பரிந்துரை செய்தனா்.

அதன்பேரில், மாற்றுத் திறன் குழந்தைகள் தோ்வு செய்யப்பட்டனா். முகாமில் சண்முகவடிவு வரவேற்றாா்.நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகள் தங்கள் பெற்றோா்களுடன் சென்று பரிசோதனை செய்தனா். ஏற்பாடுகளை சங்கரன்கோவில் வட்டார வள மையத்தினா் செய்திருந்தனா்.