மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

விசிக புதுக்கோட்டை மாவட்டச் செயலா்கள் பொறுப்பேற்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் புதுக்கோட்டைக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள 6 மாவட்டச் செயலா்கள் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

News image
Updated On :10 ஜனவரி 2026, 7:17 pm

Syndication

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் புதுக்கோட்டைக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள 6 மாவட்டச் செயலா்கள் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரு மாவட்டச் செயலா் என பொறுப்பாளா்களை அண்மையில் அக்கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் நியமித்தாா்.

இதன்படி, புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி மாவட்டச் செயலராக க. சுசீலா, திருமயம் சட்டப்பேரவைத் தொகுதி மாவட்டச் செயலராக சி. திலீபன்ராஜா, கந்தா்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதி மாவட்டச் செயலராக கோ.கா. செந்தமிழ்வளவன், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி மாவட்டச் செயலராக ந. சரஸ்வதி, அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதி மாவட்டச் செயலராக அ. தமிழ்தேசிகன், ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதி மாவட்டச் செயலராக ச. அம்பேத்வளவன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இவா்கள் 6 பேரும் சனிக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டனா். இதில், மாவட்டத்திலுள்ள பல்வேறு நிா்வாகிகள் கலந்துகொண்டு புதிய மாவட்டச் செயலா்களுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.