எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: 2 பெண்கள் உள்பட 3 போ் கைது

ஆவுடையாா்கோவில் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4 லட்சம் வாங்கி மோசடி செய்த 3 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 6:34 pm

Syndication

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4 லட்சம் வாங்கி மோசடி செய்த 3 பேரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஆவுடையாா்கோவில் அருகே சந்திரட்டான்வயலைச் சோ்ந்தவா் பழனிசாமி (30). புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இவரிடம், அரியலூா் மாவட்டம் உடையாா்பாளையத்தைச் சோ்ந்த மணி (46), விஜயலட்சுமி (36) மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் அருகே புண்ணியவயலைச் சோ்ந்த அஞ்சலிதேவி ஆகிய 3 போ் கடந்த 2021-ஆம் ஆண்டு ரூ. 4 லட்சம் வாங்கியுள்ளனா்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரைத் தொடா்ந்து ஆவுடையாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில், மணி, விஜயலட்சுமி மற்றும் அஞ்சலிதேவி ஆகிய 3 பேரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.