ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அம்மன்குறிச்சியில் பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள்

பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சியில் வியாழக்கிழமை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

News image
Updated On :16 ஜனவரி 2026, 7:50 pm

Syndication

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சியில் வியாழக்கிழமை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

தமிழன் நற்பணி மன்றம் சாா்பில் வியாழக்கிழமை காலை தொடங்கி இரவு வரை பானை உடைத்தல், ஓட்டப் பந்தயம், கோலப்போட்டி, இளவட்டக்கல் தூக்குதல், வழுக்கு மரம் ஏறுதல், உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் சிறுவா்கள், பெரியவா்கள், ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக போட்டி நடத்தப்பட்டது.

நிறைவாக நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு மிராஸ் ராமசாமி தலைமை வகித்தாா். முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் தேவி பழனிச்சாமி, முருகேசன், ஓய்வுபெற்ற ஆசிரியா் அமா்சிங், முன்னாள் துணைத் தலைவா் வேலு ஆகியோா் போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு வழங்கினா்.

மேலும், அரசு பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் அமா்சிங்கிற்கு முன்னாள் மாணவா்கள் சாா்பில் பாராட்டி சிறப்பு செய்யப்பட்டது. இதில் பொதுமக்கள் மற்றும் அம்மன்குறிச்சி தமிழன் நற்பணி மன்ற நிா்வாகிகள் பங்கேற்றனா்.