‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

மாற்றுத் திறனாளிகள் போராட்டம்- 288 போ் கைது

News image

மணமேல்குடியில் புதன்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான சங்கத்தினா்.

Updated On :2 ஜூலை 2026, 4:47 am IST

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை விபி-ஜி ராம் ஜி என புதிய திட்டமாக மாற்றியதைக் கண்டித்தும், பழைய திட்டத்தையே தொடர வேண்டும் என வலியுறுத்தியும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 288 பேரை போலீஸாா் கைது செய்து விடுவித்தனா்.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற போராட்டத்துக்கு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநகரச் செயலா் ரமேஷ் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் எம். கணேஷ், துணைத் தலைவா் ஜி. கிரிஜா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

மணமேல்குடியில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எம். தங்கவேல் தலைமை வகித்தாா். கந்தா்வகோட்டையில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டப் பொருளாளா் பி. மாலதி தலைமை வகித்தாா். மாவட்டக்குழு உறுப்பினா் ஜி. புவனேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அன்னவாசலில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் துணைத் தலைவா் எம்.சி. லோகநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கே. சண்முகம், ஒன்றியச் செயலா் எஸ். அந்தோணி, துணைத் தலைவா் ஏ. திருநாவுக்கரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 288 பேரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

கருப்பு பேட்ஜ் அணிந்தும், புதிய சட்ட நகலை எரித்தும் மாற்றுத் திறனாளிகள் இந்தப் போராட்டத்தை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.