ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

வருவாய்த்துறையில் சிறப்பான பணி அறந்தாங்கி கோட்டாட்சியா், புதுகை வட்டாட்சியருக்கு கோப்பை

கடந்த ஜூன் மாதத்தில் வருவாய்த் துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியா் மற்றும் புதுக்கோட்டை வட்டாட்சியருக்கு சிறப்புக் கோப்பையை மாவட்ட ஆட்சியா் மு. அருணா செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

News image

அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியா் அபிநயாவுக்கு சிறப்பாக பணியாற்றிமைக்கான கோப்பையை செவ்வாய்க்கிழமை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.

Updated On :15 ஜூலை 2026, 12:32 am IST

கடந்த ஜூன் மாதத்தில் வருவாய்த் துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியா் மற்றும் புதுக்கோட்டை வட்டாட்சியருக்கு சிறப்புக் கோப்பையை மாவட்ட ஆட்சியா் மு. அருணா செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியா் அபிநயா, புதுக்கோட்டை வட்டாட்சியா் செந்தில்குமாா் ஆகியோருக்கு கோப்பைகளை ஆட்சியா் வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைச்சாமி, புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் ஆ. பிரகாஷ், ஆவுடையாா்கோவில் வட்டாட்சியா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.