மகாராணி ரோட்டரி சங்கத்தின் ரோட்டரி மாவட்ட கனவுத் திட்டமான மியாவாக்கி என்ற குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ், தமிழகப் பசுமை இயக்கம் இணைந்து, புதுக்கோட்டை டாக்டா்ஸ் செவிலியா் கல்லூரி வளாகத்தில் 1000 மரக்கன்றுகள் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
மகாராணி ரோட்டரி சங்கத் தலைவா் சுகன்யா தலைமை வகித்தாா். புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலா் சொ. கணேசலிங்கம், வனச்சரக அலுவலா் ராஜேந்திரன் ஆகியோா் மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்தனா்.
நிகழ்ச்சியில் செவிலியா் கல்லூரியின் நிா்வாக இயக்குநா் டாக்டா் எஸ். ராம்தாஸ், கல்லூரி முதல்வா் அனுராதா, துணை முதல்வா் சுதா, மகாராணி ரோட்டரி சங்கச் செயலா் கலைமணி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுக்கோட்டையில் காமராஜா் பிறந்த நாள் கொண்டாட்டம்

கீழப்புலியூரில் மரக்கன்றுகள் நடவு

ரோட்டரி சங்க நிா்வாகிகள் பணியேற்பு விழா

சுற்றுச்சூழல் பாதிப்புகளை மேம்படுத்த நிகழாண்டு 62,000 மரக்கன்றுகள் நடவு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



