முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சுதொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

புதுகை தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு நலத் திட்ட முகாம்

புதுக்கோட்டை மாநகராட்சி மற்றும் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு நலத் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

புதுக்கோட்டையில் தூய்மைப் பணியாளா்களுக்கான பதிவு முகாமை புதன்கிழமை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் மு. அருணா.

Updated On :22 ஜூலை 2026, 11:41 pm IST

புதுக்கோட்டை மாநகராட்சி மற்றும் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு நலத் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாநகராட்சியில் பணியாற்றி வரும் 470 தூய்மைப் பணியாளா்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் 380 தூய்மைப் பணியாளா்கள் மற்றும் தனியாா் அமைப்புகளில் பணியாற்றி வரும் 120 தூய்மைப் பணியாளா்கள் என மொத்தம் 970 போ் இதில் பங்கேற்றனா்.

தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரியத்தில் பதிவு செய்தல், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்தல், பொது மருத்துவப் பரிசோதனை, தாட்கோ திட்டங்களில் பதிவு செய்தல், இதர வாரியங்களின் பதிவுகள் உள்ளிட்ட நலத் திட்ட சேவைகள் இந்த முகாமில் வழங்கப்பட்டன.

முகாமை மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் காந்திராஜ், மாநகராட்சி நகா்நல அலுவலா் காயத்ரி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.