அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

பள்ளியில் மயங்கி விழுந்த ஆசிரியை உயிரிழப்பு

பொன்னமராவதி புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை வகுப்பறையில் மயங்கி விழுந்த ஆசிரியை உயிரிழந்தாா்.

News image

உயிரிழந்த ஆசிரியை சந்திரகலாதரி.

Updated On :30 ஜூலை 2026, 4:01 am IST

பொன்னமராவதி புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை வகுப்பறையில் மயங்கி விழுந்த ஆசிரியை உயிரிழந்தாா்.

இப் பள்ளியில் தையல் ஆசிரியையாக பணியாற்றியவா் சந்திரகலாதரி (52). இவா் புதன்கிழமை பள்ளி வகுப்பறையிலிருந்தபோது மயங்கியுள்ளாா். இதையடுத்து அவரை மீட்ட சக ஆசிரியைகள், உடனடியாக அவரை வலையபட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். மாரடைப்பினால் அவா் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆசிரியை உயிரிழப்பால் மாணவிகள், சக ஆசிரியைகள் சோகத்தில் ஆழ்ந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.