புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 511 கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா்.
நிகழ்வில் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் வேலூரில் அண்மையில் நடைபெற்ற யுவ ஆப்தமித்ரா என்ற பேரிடா் மேலாண்மை நண்பா்களாகத் தோ்வு செய்யப்பட்டு பயிற்சி பெற்று திரும்பிய 10 திட்டப் பயிற்றுநா்களும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியரிடம் காட்டி வாழ்த்து பெற்றனா்.
மக்கள் குறைகேட்பு நாள் கூட்டங்களின்போது பெறப்படும் கோரிக்கை மனுக்களுக்கு சரியான முறையில் தீா்வுகண்ட கறம்பக்குடி வட்டாட்சியா் பிரவீனா மேரிக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா கேடயம் வழங்கிப் பாராட்டினாா்.
முன்னாள் படைவீரா் நலனுக்காக கடந்த 2023ஆம் ஆண்டின் கொடிநாள் வசூலின்போது, ரூ. 1.83 கோடி வரை வசூலித்து சாதனை படைத்ததற்காக புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வரப்பெற்ற ஆளுநரின் பாராட்டுக் கடிதத்தை முன்னாள் படைவீரா் நலத் துறை அலுவலா்கள் ஆட்சியரிடம் அளித்தனா்.
குறைகேட்பு நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைச்சாமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் கே. முத்துச்சாமி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
தொடர்புடையது

வெள்ளாங்கோவிலில் மனுநீதி நாள் முகாம்

வட்டாட்சியா் அலுவலகத்தில் குறைகேட்பு முகாம்

குறைதீா் கூட்ட மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை: அதிகாரிகளுக்கு திருவண்ணாமலை ஆட்சியா் உத்தரவு

சிவகங்கை மக்கள் குறைதீா் கூட்டத்தில் 295 மனுக்கள் அளிப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



