இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பயிா்கடன்களை முழுமையாக ரத்து செய்யக் கோரி நாகுடியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பயிா்கடன்களை முழுமையாக ரத்து செய்யக் கோரி நாகுடியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

News image

நாகுடியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கல்லணைக் கால்வாய்ப் பாசனதாரா்- விவசாயிகள் ஒருங்கிணைப்புச் சங்கத்தினா்.

Updated On :7 ஜூன் 2026, 12:26 am IST

புதுக்கோட்டை மாவட்ட கல்லணைக் கால்வாய் பாசனதாரா்- விவசாயிகள் ஒருங்கிணைப்புச் சங்கத்தின் சாா்பில் மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கண்டித்து நாகுடி கடைவீதியில் கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்கள் மற்றும் நிலுவையில் உள்ள அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அதேபோல, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து விவசாயக் கடன்களையும் மத்திய அரசு தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவா் கொக்குமடை டி. ரமேஷ் தலைமை வகித்தாா்.

ஒருங்கிணைப்பாளா்கள் எம். பெரியசாமி, பொன். கணேசன், எம். கல்யாணசுந்தரம், பழ. சோமு, மூத்த வழக்குரைஞா் பாலசுந்தரம், சங்கத்தின் செயலா் கே. வீரப்பன், பொருளாளா் வி. கோவிந்தராஜன், கௌரவத் தலைவா் அ. கணேசன், ஆலோசகா் ஆ. ராமசாமி உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

நிறைவில் தென்றல் கருப்பையா நன்றி கூறினாா்.