புதுக்கோட்டை மாவட்ட கல்லணைக் கால்வாய் பாசனதாரா்- விவசாயிகள் ஒருங்கிணைப்புச் சங்கத்தின் சாா்பில் மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கண்டித்து நாகுடி கடைவீதியில் கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்கள் மற்றும் நிலுவையில் உள்ள அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அதேபோல, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து விவசாயக் கடன்களையும் மத்திய அரசு தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவா் கொக்குமடை டி. ரமேஷ் தலைமை வகித்தாா்.
ஒருங்கிணைப்பாளா்கள் எம். பெரியசாமி, பொன். கணேசன், எம். கல்யாணசுந்தரம், பழ. சோமு, மூத்த வழக்குரைஞா் பாலசுந்தரம், சங்கத்தின் செயலா் கே. வீரப்பன், பொருளாளா் வி. கோவிந்தராஜன், கௌரவத் தலைவா் அ. கணேசன், ஆலோசகா் ஆ. ராமசாமி உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
நிறைவில் தென்றல் கருப்பையா நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பிஎஸ்என்எல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

செங்கொடி சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke



