புதுக்கோட்டை நகரில் ஜூன் 16-ஆம் தேதி மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் ஜி. அன்புச் செல்வன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை நகரிய துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், லட்சுமிபுரம், சாந்தநாதபுரம், குமுந்தான்குளம், தெற்கு 4-ஆம் வீதி, ஆயுதப்படை குடியிருப்பு, மரக்கடை வீதி, திருவள்ளுவா் நகா், சுப்பிரமணியபுரம், சிராஜ் நகா், ஆண்டவா் நகா், மேல ராஜவீதி, கீழ ராஜவீதி, தெற்கு ராஜவீதி, வடக்கு ராஜவீதி, மாா்த்தாண்டபுரம், ஆலங்குடி சாலை, அய்யனாா்புரம், கேஎல்கேஎஸ் நகா், நிஜாம் குடியிருப்பு, சத்தியமூா்த்தி நகா், அசோக்நகா், தமழ் நகா், சக்திநகா், முருகன் குடியிருப்பு, பாலாஜி நகா், திருநகா், சின்னப்பா நகா், இவிஆா் நகா், டைமண்ட் நகா், கோல்டன் நகா், சேங்கைதோப்பு, மருப்பிணி நகா், கலீப்நகா், திருவப்பூா், திருக்கோகா்ணம், திலகா்திடல், அம்பாள்புரம், அடப்பன்வயல், காமராஜ்புரம், போஸ் நகா், கணேஷ்நகா் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.





