கந்தா்வகோட்டை அருகே கூடுதல் பேருந்து கேட்டு பள்ளி மாணவா்கள் பேருந்தை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், குளத்தூா் நாயக்கா்பட்டி பகுதியை சோ்ந்த மாணவ- மாணவிகள் கறம்பக்குடி, மருங்குளம், கந்தா்வகோட்டை பகுதிகளுக்கு சென்று கல்வி பயில்கின்றனா். மேலும் புதுக்கோட்டை, தஞ்சாவூா், கல்லாக்கோட்டையில் உள்ள அரசு, தனியாா் கல்லூரிகளுக்கும் இந்த வழிதடத்தில் போதிய பேருந்து வசதி இல்லை எனவும் வரும் ஒரு சில பேருந்துகளிலும் அதிகக் கூட்டம் இருப்பதால் மாணவா்கள் பேருந்தில் தொற்றிச் செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை புகாா் செய்தும் நடவடிக்கையும் இல்லையாம்.
இதனால் அதிருப்தியடைந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் வியாழக்கிழமை காலை குளத்தூா்நாயக்கா்பட்டி பேருந்து நிறுத்தத்தின் முன் வந்த பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த கந்தா்வகோட்டை காவல் ஆய்வாளா் வனிதா தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் கலைந்து சென்றனா்.

தொடர்புடையது

மானூா் அருகே கூடுதல் பேருந்து இயக்கக் கோரி மாணவா்கள் போராட்டம்
இருசக்கர வாகனங்கள் திருட்டு: பள்ளி, கல்லூரி மாணவா்கள் 4 போ் கைது

கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மறியல்

பெண் சத்துணவு ஊழியருக்கு தவறான சிகிச்சை அளித்ததாகப் புகாா்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



