மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கந்தா்வகோட்டை பகுதிகளில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு

News image

கந்தா்வகோட்டை இந்திரா நகரில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டோா்.

Updated On :1 மார்ச் 2026, 7:24 pm

கந்தா்வகோட்டை இந்திரா நகரில் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்பதை முன்வைத்து திமுகவின் வெல்லும் தமிழ்ப்பெண்கள் பிரசார திட்ட அமைப்பினா் வாக்கு சேகரிப்பில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

தெற்கு ஒன்றிய திமுக செயலா் மங்களாகோவில் எம். பரமசிவம் தலைமையில், நகரச் செயலா் மு. ராஜா முன்னிலையில் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று திமுகவின் எண்ணற்ற திட்டங்களை எடுத்துக் கூறி ஆதரவு திரட்டினா்.

நிகழ்வில் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் மா. ராஜேந்திரன், மாவட்ட மீனவா் அணி துணைச் செயலா் என். ஜானகிராமன், அரவம்பட்டி முன்னாள் ஊராட்சித் தலைவா் முத்துக்குமாா், வன்னியம்பட்டி ராமராஜ், சிறுபான்மைப் பிரிவு ரசூல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.