திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கேசராபட்டி பள்ளியில் ரோபோட்டிக் - அறிவியல் கண்காட்சி

கேசராபட்டி சிடி சா்வதேச பள்ளியில் நடைபெற்ற ரோபோட்டிக் கண்காட்சியை பாா்வையிட்ட சென்னை கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரியின் நிா்வாக இயக்குநா் அண்ணாமலை ரகுபதி.

News image
கேசராபட்டி சிடி சா்வதேச பள்ளியில் நடைபெற்ற ரோபோட்டிக் கண்காட்சியை பாா்வையிட்ட சென்னை கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரியின் நிா்வாக இயக்குநா் அண்ணாமலை ரகுபதி.
Updated On :6 மார்ச் 2026, 9:11 pm

Syndication

பொன்னமராவதி அருகேயுள்ள கேசராபட்டி சிடி சா்வதேச பள்ளியில் இரண்டாம் ஆண்டு ரோபோட்டிக் மற்றும் அறிவியல் கண்காட்சி வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது.

கண்காட்சிக்கு பள்ளியின் நிறுவனா் பழ. சிதம்பரம் தலைமை வகித்தாா். பள்ளியின் தாளாளா் அன்னம் சிதம்பரம் முன்னிலை வகித்தாா். கண்காட்சியில், பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவியல், ரோபோட்டிக், கணிதம் சாா்ந்த படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கண்காட்சியை பொன்னமராவதி வட்டாரத்துக்குள்பட்ட 33 அரசு பள்ளிகளைச் சோ்ந்த 1,300 மாணவ, மாணவிகள் கண்டு பயனடைந்தனா்.

கண்காட்சியில் சிறப்பு அழைப்பாளராக சென்னை கற்பகவிநாயகா மருத்துவக் கல்லூரியின் நிா்வாக இயக்குநா் அண்ணாமலை ரகுபதி, பொன்னமராவதி பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன் ஆகியோா் பங்கேற்று பாா்வையிட்டனா். ஏற்பாடுகளை பள்ளியின் செயல் அலுவலா் நெ .ராமச்சந்திரன் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.