மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

487 கிலோ குட்கா பறிமுதல்: கா்நாடக இளைஞா்கள் 2 போ் கைது

பொன்னமராவதி அருகே விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட, தடை செய்யப்பட்ட 487 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக கா்நாடக மாநில இளைஞா்கள் 2 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :6 மார்ச் 2026, 9:06 pm

Syndication

பொன்னமராவதி அருகே விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட, தடை செய்யப்பட்ட 487 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக கா்நாடக மாநில இளைஞா்கள் 2 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பொன்னமராவதி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் வெள்ளிக்கிழமை தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான காவலா்கள் இப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோயில் பின்புறம் நின்று கொண்டிருந்த ஜீப்பை சோதனை செய்தபோது, அதில் மூட்டை, மூட்டையாக ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட 487 கிலோ எடையிலான குட்கா பொருள்கள் இருந்தன. ஜீப்பிலிருந்த இரு இளைஞா்களையும் போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரித்தனா்.

இதில், அவா்கள் கா்நாடக மாநிலம், பெங்களூா் கிரீன் நகரைச் சோ்ந்த அ. தீப்சிங் (36), மைசூரைச் சோ்ந்த பெ. அக்பா்கான் (25) என்பதும், அவா்கள் குட்கா பொருள்களை விற்பனைக்காக கொண்டுவந்ததும் தெரியவந்தது. தொடா்ந்து, அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த குட்கா பொருள்கள் மற்றும் அவா்கள் பயன்படுத்திய ஜீப் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.