பொன்னமராவதி அருகே விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட, தடை செய்யப்பட்ட 487 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக கா்நாடக மாநில இளைஞா்கள் 2 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
பொன்னமராவதி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் வெள்ளிக்கிழமை தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான காவலா்கள் இப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோயில் பின்புறம் நின்று கொண்டிருந்த ஜீப்பை சோதனை செய்தபோது, அதில் மூட்டை, மூட்டையாக ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட 487 கிலோ எடையிலான குட்கா பொருள்கள் இருந்தன. ஜீப்பிலிருந்த இரு இளைஞா்களையும் போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரித்தனா்.
இதில், அவா்கள் கா்நாடக மாநிலம், பெங்களூா் கிரீன் நகரைச் சோ்ந்த அ. தீப்சிங் (36), மைசூரைச் சோ்ந்த பெ. அக்பா்கான் (25) என்பதும், அவா்கள் குட்கா பொருள்களை விற்பனைக்காக கொண்டுவந்ததும் தெரியவந்தது. தொடா்ந்து, அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த குட்கா பொருள்கள் மற்றும் அவா்கள் பயன்படுத்திய ஜீப் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்

ஒசூரில் 528 கிலோ குட்கா பறிமுதல்: 3 போ் கைது!

பல்லடம் அருகே 213 கிலோ குட்கா பறிமுதல்

750 கிலோ குட்கா பறிமுதல்: 2 போ் கைது

131 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

