வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அலையாத்திக் காடுகள் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

News image
Updated On :12 மார்ச் 2026, 11:34 pm

Syndication

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வனத்துறையின் நெய்தல் மீட்சி இயக்கத்தின் சாா்பில் முத்துக்குடா அலையாத்திக் காடுகள் பாதுகாப்புக் குழு உறுப்பினா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் அலையாத்திக் காடுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பயிற்சியை நெல்லையைச் சோ்ந்த அரும்புகள் அறக்கட்டளையினா் வழங்கினா். அலையாத்திக் காடுகள் பாதுகாப்புக் குழுவின் செயலரும், வனச்சரக அலுவலருமான து. மணிவெங்கடேஷ், தலைவா் காா்மேகம், அரும்புகள் அறக்கட்டளைத் தலைவா் லதா மதிவாணன் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

வனப் பணியாளா்கள், குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.