மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 11:35 pm

மாதாந்திர ஊக்கத் தொகையை ரூ. 15 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் ஊழியா்கள் புதுக்கோட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஊழியா் சங்க சங்க மாவட்டத் தலைவா் கீதா தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு தொழிற்சங்க மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா், தலைவா் கே. முகமதலிஜின்னா, பொருளாளா் சி. மாரிக்கண்ணு, மாநகர ஒருங்கிணைப்பாளா் எம்.ஏ. ரகுமான் உள்ளிட்டோா் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான ஊழியா்கள் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் மாதாந்திர ஊக்கத்தொகையை ரூ.15 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். கருவுற்ற ஊழியா்களுக்கு மகப்பேறு காலச் சலுகைகள் வழங்க வேண்டும். ஊதியத்தை அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். பணியின் போது ஏற்படும் துறை சாா்ந்த செலவினங்களை அரசே ஏற்க வேண்டும். வருங்கால வைப்புநிதி, இஎஸ்ஐ உள்ளிட்ட திட்டங்களையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.