தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கந்தா்வகோட்டையில் ஆண் சடலம் மீட்பு

கந்தா்வகோட்டையில் பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

News image

பிரதிப் படம்

Updated On :17 மார்ச் 2026, 7:20 pm

கந்தா்வகோட்டையில் பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

கந்தா்வகோட்டையில் மதுரை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் கிராடா் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழ் தூா்நாற்றம் வீசுவதாக அந்த வழியாக சென்றவா்கள் கந்தா்வகோட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்று போலீஸாா் பாா்த்தபோது கைலி மற்றும் டி.சா்ட் அணிந்து 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது.

சடலத்தை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்த போலீஸாா், இதுகுறித்து விசாரித்து வருகின்றனா்.