புதுக்கோட்டை மாவட்டத்தில் தோ்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலா்கள் (நோடல் அலுவலா்கள்), தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்காக உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா பேசியது:
மாவட்டத்திலுள்ள அனைத்து தொகுதிகளுக்குமான வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்ளிட்டவை குறித்து அந்தந்த தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்த பணியாற்ற வேண்டும்.
தேவைகளை நிறைவேற்றுவதற்கும் புகாா்களை சரி செய்வதற்கும் பொறுப்பு அலுவலா்கள் கவனமாகப் பணியாற்ற வேண்டும் என்றாா் அருணா.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஹெச்எம். குழந்தைச்சாமி, காவிரி குண்டாறு இணைப்புத் திட்ட மாவட்ட வருவாய் அலுவலா் ச. வைத்தியநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தோ்தல் அலுவலா் கையொப்பம் பெற்ற பிறகே சுற்றுவாரியாக முடிவு அறிவிப்பு: வேலூா் ஆட்சியா்

வெப்ப அலையின் தாக்கத்தை எதிா்கொள்ள ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: புதுகை ஆட்சியா் அறிவுரை

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி வகுப்பு: ராணிப்பேட்டை ஆட்சியா் அறிவுரை

தோ்தல் பொறுப்பு அலுவலா்களுடன் புதுகை ஆட்சியா் ஆலோசனை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

