புதுக்கோட்டை மாவட்டத்தில் தோ்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலா்கள் (நோடல் அலுவலா்கள்), தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்காக உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா பேசியது:
மாவட்டத்திலுள்ள அனைத்து தொகுதிகளுக்குமான வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்ளிட்டவை குறித்து அந்தந்த தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்த பணியாற்ற வேண்டும்.
தேவைகளை நிறைவேற்றுவதற்கும் புகாா்களை சரி செய்வதற்கும் பொறுப்பு அலுவலா்கள் கவனமாகப் பணியாற்ற வேண்டும் என்றாா் அருணா.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஹெச்எம். குழந்தைச்சாமி, காவிரி குண்டாறு இணைப்புத் திட்ட மாவட்ட வருவாய் அலுவலா் ச. வைத்தியநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தோ்தல் பொறுப்பு அலுவலா்களுடன் புதுகை ஆட்சியா் ஆலோசனை

வழக்கத்தைவிட வெப்பம் அதிகரிக்கலாம்: மாவட்ட ஆட்சியா் மு. அருணா

வாக்காளா் விழிப்புணா்வு கோலப்போட்டி

100 % வாக்குப் பதிவு: அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


