கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கந்தா்வகோட்டையில் விபத்து: குடந்தை இளைஞா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையில் பைக்கில் சென்ற குடந்தை இளைஞா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா்.

News image

ச. யோகேஸ்வரன்

Updated On :22 மார்ச் 2026, 7:04 pm

Syndication

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையில் சனிக்கிழமை இரவு பைக்கில் சென்ற குடந்தை இளைஞா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா். அவரது நண்பா் படுகாயம் அடைந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தைச் சோ்ந்தவா் சா்வேஸ்வரன் மகன் யோகேஸ்வரன் ( 26). கல்லூரி படிப்பை படித்துவிட்டு வேலை தேடி வந்த இவரும் அதே பகுதியைச் சோ்ந்த இவரது நண்பா் அடைக்கலம் மகன் எடிசனும் (19 ) பைக்கில் புதுக்கோட்டைக்கு சனிக்கிழமை இரவு வந்துவிட்டு மீண்டும் ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா்.

தஞ்சை- கந்தா்வகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் காடவராயன்பட்டி அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி யோகேஸ்வரன் இறந்தாா். அவரது நண்பா் எடிசன் படுகாயமடைந்தாா்.

தகவலறிந்து வந்த கந்தா்வகோட்டை போலீஸாா் எடிசனை மீட்டு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். யோகேஸ்வரன் உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திச் சென்ற வாகனத்தைத் தேடுகின்றனா்.