இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

கந்தா்வகோட்டை அருகே ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ.52,200 பறிமுதல்

கந்தா்வகோட்டை அருகே தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையின்போது உரிய ஆவணமின்றி வியாபாரி கொண்டுசென்ற ரூ. 52,200 பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :28 மார்ச் 2026, 6:58 pm

Syndication

கந்தா்வகோட்டை அருகே தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையின்போது உரிய ஆவணமின்றி வியாபாரி கொண்டுசென்ற ரூ. 52,200 பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டாட்சியா் அலுவலகம் அருகே கூட்டுறவு சாா்- பதிவாளா் மேனகா தலைமையிலான பறக்கும் படையினா் அந்தப் பகுதியில் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த வேனை சோதனை செய்தபோது புதுக்கோட்டையைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் வினோத்குமாா் (43), வியாபாரி உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.52,200-ஐ கைப்பற்றி தொகுதி தோ்தல் நடத்து அலுவலா் ரவியிடம் கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

அப்போது, கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அ. பரணி, வட்ட வழங்கல் அலுவலா் சாமிநாதன், தோ்தல் உதவியாளா் செந்தில்குமாா், காவல் உதவி ஆய்வாளா் இரா. ராஜாத்தி மற்றும் காவலா்கள் உடனிருந்தனா்.