புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இலக்கிய, பொது நல அமைப்புகளின் புரவலராக இருந்த, பேக்கரி மஹராஜ் நிறுவனா் மறைந்த சீனு சின்னப்பாவின் 4-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெருங்கொண்டான்விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவண்ணாமலை ஆதீனம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா், புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் தங்கம் மூா்த்தி, அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா, திமுக மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் மற்றும் திமுக பிரமுகா்கள் த. சந்திரசேகரன், தென்னலூா் பழனியப்பன் உள்ளிட்ட பல்வேறு பொது நல அமைப்பு, இலக்கிய அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டு சீனு சின்னப்பாவின் சிலைக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். வள்ளலாா் வழி பாடல்களும், திருமுறைகளும் பாடப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொழிலதிபா் அருண் சின்னப்பா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் - முதல்வா் விஜய்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

புள்ளிகள்

சேலம் மாவட்ட ஆட்சியராக க. இளம்பகவத் நியமனம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



